மல்யுத்த வீரர்கள் போராட்டம் | அரசியல் சதியை அம்பலப்படுத்துவேன்: பிரிஜ் பூஷன் சிங்

புதுடெல்லி: மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டத்தின் பின்னணியில் உள்ள அரசியல் சதியை இன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பலப்படுத்துவேன் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூருடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் உடன்பாடு எதும் எட்டப்படவில்லை. இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைத்தே ஆக வேண்டும் என்று வீரர்கள் திட்டவட்டமாக தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அமைச்சருடனான ஆலோசனையில் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், ரவி தாஹியா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/UsD8lgN