டேராடூனில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பை மருத்துவமனைக்கு ரிஷப் பந்த் மாற்றம்

மும்பை: ரிஷப் பந்தை மும்பைக்கு மாற்றுவது தொடர்பான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது. டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரிஷப் பந்த், ஏர்ஆம்புலன்ஸ் மூலமாக மும்பைக்குக் கொண்டு வரப்படுகிறார்.

25 வயதான ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் 30-ம் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு தனியாக காரில் சென்ற போது டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கூடுதல் சிகிச்சைக்காக ரிஷப் பந்தை மும்பைக்கு அழைத்துச் செல்ல பிசிசிஐ முடிவு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ezTqGZ4