ரிஷப் பந்த் காயம் - ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் சூர்யகுமார் யாதவ் ஆட வேண்டும். ஏன்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் ஆடுகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரு அணிகளும்தான் விளையாடும் என்ற நிலை உருவாகியுள்ளது. இப்போது இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேங்கிங்கில் 99 புள்ளிகளுடன் 58.93% என்று 2ம் இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் இலங்கை, 4வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. எனவே ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான இறுதிப் போட்டிக்கான பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

ரிஷப் பந்த் காயமடைந்திருப்பது இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக உள்ளது. அந்த அதிரடி வெற்றிடத்தைப் போக்க சூர்யகுமார் யாதவை அணியில் கொண்டு வருவதுதான் மிகச்சிறந்த தெரிவாக இருக்கும். இதோடு சூர்யகுமார் யாதவின் எஞ்சியிருக்கும் கிரிக்கெட் காலத்தில் முழுமையாக அவரது அதிரடியைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனமும் கூட.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/2EzpnUq