
புனே: இலங்கை அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று மோதுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் டி 20 தொடரை கைப்பற்றும்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 163 ரன்கள் இலக்கை விரட்டிய இலங்கை அணி ஆட்டத்தை கடைசி பந்து வரை எடுத்துச் சென்று 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/p0UtgFq