ரஞ்சி கோப்பை - 144 ரன்களில் சுருண்டது தமிழக அணி

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி 44 ரன்களை சேர்ப்பதற்குள்ளேயே 4 முக்கிய விக்கெட்களை இழந்தது. சாய் சுதர்சன் 0, சாய் கிஷோர் 0, பாபா அபராஜித் 8, கேப்டன் பாபா இந்திரஜித் 9 ரன்களில் நடையை கட்டினர். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய நாராயண் ஜெகதீசன் 23, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 55, விஜய் சங்கர் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/qzu5bDU