
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஆடவருக்கான ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிலி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் நெதர்லாந்து அணி கோல் மழை பொழிந்து 14-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை நெதர்லாந்து படைத்தது. இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 12-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதேசாதனையாக இருந்தது. இதை தற்போது நெதர்லாந்து முறியடித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/O5dM4xJ