புது டெல்லி: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இந்நிலையில், இரு அணிக்கும் தனது வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் கோல்களை சரி சமமாக பதிவு செய்து அசத்தின. இதில் பிரான்ஸ் அணி ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் சிறப்பான கம்பேக் கொடுத்து முதல் கோலை பதிவு செய்தது. அந்த அணி பதிவு செய்த மூன்று கோல்களையும் எம்பாப்பே பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/8F0YVO4