லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன. இந்த போட்டியை நேரில் பார்த்து மகிழும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி கத்தார் சென்றுள்ளார்.
அவர் இறுதிப் போட்டி நடைபெற்று வரும் லுசைல் மைதானத்தில் இருந்து சமூக வலைதளத்தில் சில பதிவுகளை பதிவிட்டிருந்தார். அதில் மைதானத்தில் மெஸ்ஸி அலை வீசுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது மெஸ்ஸியின் ரசிகர்கள் அதிகளவில் மைதானத்தில் குழுமி உள்ளதை தெரிவிக்கும் விதமாக அது அமைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/SJ1QoWR