FIFA WC | பிரான்ஸ் அணியை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினா: மெஸ்ஸி சாதனை
தோகா: பிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்றகோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அர்ஜெண்டினா வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும்.
பிஃபா 22-வது உலகக் கோப்பைகால்பந்து தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. 32 அணிகள் கலந்துகொண்ட இந்த பிரபஞ்ச திருவிழாவின் இறுதி ஆட்டம் நேற்று இரவுதோகாவின் லுசைல் நகரில் உள்ளலுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பட்டம் வெல்வதற்காக நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் பிரான்ஸ் அணியானது, அர்ஜெண்டினாவை எதிர்கொண்டது. இந்த போட்டியை காண மைதானத்தில் 88 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/lMiqYsc