
தோகா: கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டியாகோ மரடோனாவின் சாதனையை முறியடித்துள்ளார் சக நாட்டு வீரர் லியோனல் மெஸ்ஸி.
அர்ஜென்டினா அணி சார்பில் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார் மரடோனா. இந்த சாதனையை கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது முயறியடித்தார் மெஸ்ஸி. நள்ளிரவு நடந்த ஆட்டத்தில், அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி 35-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்) அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா என்றார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இருக்கும் மெஸ்ஸி, இந்த தொடரிலேயே அந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/QqRoV6b