
தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இம்முறை ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ, செனகல் ஆகிய இரு அணிகள் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த எந்த ஒரு அணியும் லீக் சுற்றை கடக்கவில்லை. இதன் மூலம் 1986-ம் ஆண்டுக்கு பிறகு கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்ற மோசமான சாதனையை ஆப்பிரிக்க நாடுகள் படைத்திருந்தன.
ஆப்பிரிக்க நாடுகள் பல்வேறு முன்னணி அணிகளுக்கு இம்முறை அதிர்ச்சி தோல்விகளை பரிசாக கொடுத்தது. மொராக்கோ அணி பெல்ஜியம், கனடா அணிகளை வீழ்த்தி எஃப் பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது. செனகல் அணியானது தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்திடம் வீழ்ந்தாலும் அதன் பின்னர் கத்தார், ஈக்வேடார் அணிகளை பந்தாடியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/7siTmgW