
பிரஸ்ஸல்ஸ்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது மொராக்கோ அணி. அதனால் விரக்தி அடைந்த அந்த நாட்டு ரசிகர்கள் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் பகுதியில் போலீஸாருடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனர்.
காலம்காலமாக உலகக் கோப்பை தொடரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த அணிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் அரையிறுதிக்கு முதல் முறையாக முன்னேறி இருந்தது ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ. அந்த அணி இந்த தொடரில் இரண்டு கோல்களை மட்டும்தான் விட்டுக் கொடுத்துள்ளது. அதுவும் அரையிறுதிப் போட்டியில்தான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/pLiyNe9