FIFA WC 2022 அரையிறுதி முன்னோட்டம்: குரோஷியாவின் நடுக்கள ஜாம்பவான்களை சமாளிக்குமா மெஸ்ஸி படை?

கத்தார் நாட்டில் நடைபெற்றுவரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் ஓர் அருமையான தொடராக சர்ச்சைகள் அதிகமில்லாமல் சுவாரஸியமான உச்சக்கட்டத்தை நோக்கி அரையிறுதிப் போட்டிகளுக்கு வந்துள்ளது. முதல் அரையிறுதியில் புதன்கிழமை அன்று அதிகாலை 12:30 (செவ்வாய் நள்ளிரவு) மணிக்கு அர்ஜென்டினா அணி, பிரேசிலை வீழ்த்திய குரோஷியாவை சந்திக்கின்றது. இதற்கு அடுத்த நாள் பிரான்ஸ் அணியும், வரலாறு படைக்க காத்திருக்கும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மொராக்கோ அணியும் விளையாடுகின்றன.

அர்ஜென்டினா - குரோஷியா போட்டியைப் பொறுத்தவரை இரு அணிகளும் உலகக் கோப்பையில் 3-வது முறையாக நேருக்கு நேர பலப்பரீட்சை செய்ய உள்ளன. ஆனால், நாக் அவுட் சுற்றில் மோதுவது இதுவே முதல் முறை. 1998 உலகக் கோப்பையில் அர்ஜென்டினா, குரோஷியாவை 1-0 என வீழ்த்தியது. ஆனால் இது லீக் சுற்று போட்டியாகும். 2018-ல் குரோஷியா 3-0 என வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/prI4tqL