
கத்தார் நாட்டில் நடைபெற்றுவரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் ஓர் அருமையான தொடராக சர்ச்சைகள் அதிகமில்லாமல் சுவாரஸியமான உச்சக்கட்டத்தை நோக்கி அரையிறுதிப் போட்டிகளுக்கு வந்துள்ளது. முதல் அரையிறுதியில் புதன்கிழமை அன்று அதிகாலை 12:30 (செவ்வாய் நள்ளிரவு) மணிக்கு அர்ஜென்டினா அணி, பிரேசிலை வீழ்த்திய குரோஷியாவை சந்திக்கின்றது. இதற்கு அடுத்த நாள் பிரான்ஸ் அணியும், வரலாறு படைக்க காத்திருக்கும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மொராக்கோ அணியும் விளையாடுகின்றன.
அர்ஜென்டினா - குரோஷியா போட்டியைப் பொறுத்தவரை இரு அணிகளும் உலகக் கோப்பையில் 3-வது முறையாக நேருக்கு நேர பலப்பரீட்சை செய்ய உள்ளன. ஆனால், நாக் அவுட் சுற்றில் மோதுவது இதுவே முதல் முறை. 1998 உலகக் கோப்பையில் அர்ஜென்டினா, குரோஷியாவை 1-0 என வீழ்த்தியது. ஆனால் இது லீக் சுற்று போட்டியாகும். 2018-ல் குரோஷியா 3-0 என வென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/prI4tqL