FIFA WC 2022 | ரொனால்டோ சுயநலவாதியா? - ஆட்டத்திறன் மங்கி ‘நீக்கம்’ ஆனதன் பின்னணி

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி - 16 ஆட்டத்தில் சுவிட்ஸர்லாந்து அணியை பின்னி பெடலெடுத்து 6-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்று காலிறுதிக்கு அதிரடியாக நுழைந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை என்பதை விட, அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டனர் என்பதே உண்மை. இவருக்குப் பதிலாக ஆடிய 21 வயது ரேமோஸ் ஹாட்ரிக் கோல்களை அடித்து ரொனால்டோ ‘ட்ராப்’ சரியே என்பதை நியாயப்படுத்தியுள்ளார்.

ஆனால், சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. மெஸ்ஸி, நெய்மர், மோட்ரிச் போன்ற பெரிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ரொனால்டோவை நாக்-அவுட் போட்டியில் ட்ராப் செய்யலாமா என்ற கேள்வி அனைவருக்கும் ஏற்படுதுவது இயல்பே. அன்று தென் கொரியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் தோற்றபோது தென் கொரியாவின் முதல் கோல் எப்படி வந்தது எனில் கோல் போஸ்ட்டுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்று அவரது முதுகில் பட்டு தென் கொரிய வீரரிடம் பந்து செல்ல அவர் கோலாக மாற்றினார். எனவே, ரொனால்டோ ஆட்டத்தில் பழைய வேகம் இல்லை, மிகவும் சுயநலமாக ஆடுகிறார், அணியில் மற்ற வீரர்களின் பங்கை சரியாக அவர் பயன்படுத்துவதில்லை, மற்றவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ரொனால்டோ மீது எழுந்தது உண்மையே.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Fosubyr