
விளையாட்டில் தீவிர ஆர்வத்துடன் ஈடுபடும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தன் நாட்டுக்காக விளையாட வேண்டுமென்ற பெருங்கனவு இருக்கும். அந்தக் கனவை இன்று மெய்ப்பிக்கச் செய்ததோடு 7 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனையும் படைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் மேஜிக் ஸ்பின்னர் அப்ரார் அகமது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் வீரராக அவர் களம் கண்டார். முதல் இன்னிங்ஸில் 22 ஓவர்கள் வீசி 114 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஒரு ஓவர் மெய்டன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/4psS67i