டெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிரதோஷ் ரஞ்ஜன் பால் சதம் விளாசி அசத்தினார்.
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்டத்தில் 54 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 25, நாராயண் ஜெகதீசன் 34, பாபா அபராஜித் 57, பாபா இந்திரஜித் 71, வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/N5KPTjU