
மும்பை: சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்திய அணிக்காக உம்ரான் மாலிக் விளையாடுவதை பார்க்கவே தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இவர் விளையாடியவர்.
73 வயதான கவாஸ்கர் 1971 முதல் 1987 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். 125 டெஸ்ட் போட்டிகளில் 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன்களும் எடுத்துள்ளார் அவர். மும்பையைச் சேர்ந்தவர். ஓய்வுக்கு பிறகு போட்டிகளை வர்ணனை செய்வது, கிரிக்கெட் தொடர்பாக எழுதுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/NDOEy3o