கராச்சி: கராச்சியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதையடுத்து, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்த அணி.
பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 304 ரன்களை எடுக்க, இங்கிலாந்து அணி 354 ரன்களை எடுத்திருந்தது. 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் 216 ரன்களுக்குச் சுருண்டது. இந்த போட்டியில், 18-வயதே நிரம்பிய இங்கிலாந்தின் ரேஹான் அகமது என்ற லெக் ஸ்பின்னர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிகக்குறைந்த வயதில் அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/6riStxY