"ரோஹித் - திராவிட் கூட்டணி நீடித்தால் இந்திய அணி உதிர்ந்து விடும்; மீண்டும் கோலியைக் கேப்டனாக்க வேண்டும்"

டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய காரணத்தினால் இந்தியாவின் சிறந்த கேப்டன் விராட் கோலியை நெருக்கி அவரிடமிருந்து கேப்டன்சியைப் பிடுங்கி ரோஹித் சர்மாவிடம் கொடுத்தனர். ரோஹித் சர்மா ஒரு கேப்டன்சி வீரரா என்பதே சந்தேகமாக இருக்கிறது என்ற வகையில் இப்போது இந்திய அணி உடைந்து நொறுங்கி விடும் அபாயத்தில் உள்ளது. ஃபார்மில் இல்லாமல் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடையும் வங்கதேச அணியிடம் சூப்பர் ஸ்டார்கள் நிரம்பிய இந்திய அணி தோல்வி அடைகிறது என்றால் உண்மையில் இது கவலைக்குரிய விஷயமாகும்.
2023 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்குள் ஒரு நிலையான 12-14 வீரர்களை தயார் படுத்தும் முயற்சியில் ரோஹித் சர்மா-திராவிட் கூட்டணி தோல்வியடையும் என்றே தெரிகிறது. ஸ்டார் வீரர்கள் ஒரு தொடரில் விளையாடினால் இன்னொரு தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்கின்றனர். கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் சீரான பார்மில் இல்லாத போதே ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர். பும்ரா கதை என்னவென்றே தெரியவில்லை, ஜடேஜா, கே.எல்.ராகுல் உடல்தகுதி கேள்விக்குரியதாக உள்ளது. உடல் தகுதி பட்டியலில் ரோஹித் சர்மாவும் தற்போது இணைந்துள்ளார். அணியில் முழு உடல்தகுதியுடன் பிரமாதமாக இருக்கும் ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. ஆனால் அவரது பேட்டிங் பார்ம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது, கோலிக்கே உரித்தான சீரான முறையில் ரன்கள் எடுக்கும் தன்மை இப்போது இல்லை என்றாலும் கோலியை நம்பலாம். மீண்டும் பழைய பார்முக்குத் திரும்பும் தன்மையை டி20 உலகக்கோப்பையில் நிரூபித்தார். பீல்டிங்கில் கில்லியாக திகழ்கிறார். அணியை வழிநடத்துவதிலும் உத்வேகமாக செயல்பட்டவர்தான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/vk2CHVc