மந்திரக்காரன் மெஸ்ஸி ஏன் மகுடம்சூடவேண்டும்?

அர்ஜெண்டினா கால்பந்து அணியின்நாயகன் லயோனல் மெஸ்ஸி தனது சர்வதேச கால்பந்து பயணத்தின் கடைசி அத்தியாயத்தை மணிமகுடம் சூடி முடிக்க காத்திருக்கிறார். மறைந்த ஜாம்பவான் டீகோ மரடோனாவுடன் ஒப்பிடப்பட்ட லயோனல் மெஸ்ஸி அவரை போன்றே உலகக் கோப்பையுடன் மீண்டும் பியூனஸ் அயர்ஸுக்கு செல்ல வேண்டும் என்றபெரும் அழுத்தத்துடனே கத்தாரில் கால் வைத்தார். அதே நேரத்தில் அவரது சமகால நட்சத்திர வீரர்களான பிரேசிலின் நெய்மர்,போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இறுதிக்கட்ட தடைகளை தாண்ட முடியாமல் தாயகம் திரும்பிவிட்டனர்.

அர்ஜெண்டினாவின் தொடக்க ஆட்டத்தில் இருந்து குரோஷியாவை எதிர்த்து அரையிறுதியில் வெற்றி பெற்றது வரை தொடர் முழுவதும்முழுமையான நட்சத்திரமாக மின்னினார் 35 வயதான மெஸ்ஸி. இறுதிப் போட்டிக்கு அர்ஜெண்டினாவை அழைத்துச் சென்ற வழியில் 5 கோல்கள், 3 கோல்கள் அடிக்க உதவி என புள்ளி விவரங்கள் மெஸ்ஸியின் திறன்களை பேசுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/yFE6ZDv