
நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் மொராக்கோவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது போர்ச்சுகல் அணி. அந்த அணியில் விளையாடிய ரொனால்டோவுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக அமைந்துள்ளது. இந்தத் தோல்விக்கு பிறகு கண்ணீர் மல்க களத்தில் இருந்து அவர் விடைபெற்றார்.
இந்தச் சூழலில் அவரை புகழ்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. ரொனால்டோவின் கோடான கோடி ரசிகர்களில் கோலியும் ஒருவர் என்பதை இந்தப் பதிவு சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/6hcLyRe