தாய்நாடான ஜிம்பாப்வே அணிக்காக விளையாடும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வந்த கேரி பேலன்ஸ், இனி தன் தாய்நாடான ஜிம்பாப்வே அணிக்காக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஜிம்பாப்வே கிரிக்கெட் உடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 வயதான கேரி கடந்த 2013 வாக்கில் இங்கிலாந்து அணி சார்பில் விளையாட சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடைசியாக கடந்த 2017 ஜூலை வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தார். இடது கை பேட்ஸ்மேன். அதன் பிறகு அணியில் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,498 ரன்கள் எடுத்துள்ளார். 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/k0D815m