
கத்தார் உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணிக்கு நேற்று குரோஷியா அணி அதிர்ச்சி மருத்துவம் அளித்தது. உலக பிரேசில் ரசிகர்கள் மனமுடைந்தனர். மைதானத்தில் பிரேசில் வீரர்கள், ரசிகர்கள் ஒரே அழுகை. உண்மையில் மனமுடையும் தருணம்தான். ஆனால், அதற்காக திட்டமிட்டு பிரேசிலின் நடன அசைவு கால்பந்து திறனை முடக்கியதையும் நாம் நினைவில் நிறுத்துவது அவசியம்.
4-வது பெனால்டியை மார்க்கின்ஹோஸ் போஸ்ட்டில் அடிக்க நெய்மர் கண்களில் கண்ணீர். நெய்மரை 5-வது ஷாட் அடிக்க மிச்சம் பிடித்து வைத்திருந்தார் பிரேசில் பயிற்சியாளர் டிட்டே. ஆனால், அப்படி செய்திருக்கலாமா என்பதே கேள்வி. எப்போதும் பெனால்டி ஷூட் அவுட்டில் இந்த 4-வது ஷாட்தான் எந்த அணிக்குமே பிரச்சினை என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/KslpyIu