கத்தாரில் நடைபெற்ற பிஃபாவின் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி 36 வருடங்களுக்குப் பிறகு மகுடம் சூடியது. உலகக் கோப்பை தொடரில் அர்ஜெண்டினா பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தது.
பிரான்ஸ் – அர்ஜெண்டினா மோதிய இறுதிப்போட்டி இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளிலேயே ‘ஆல் டைம் கிரேட்’ என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வெற்றியின் மூலம் கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸியின் நீண்டகால கனவு நிறைவேறியுள்ளது. லா லிகா தொடரில் 10 முறை சாம்பியன் பட்டம், 4 முறை யுஏஇஎஃப் சாம்பியன்ஸ் லீக்கில் பட்டம், 7 முறை பாலோன் டி’ஓர் விருது, லீக் 1 பட்டம், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை பட்டம், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம், கோபா அமெரிக்காபட்டம், பைனலிசிமா தொடரில் கோப்பை என கால்பந்தில் அனைத்து கோப்பைகளையும் வென்று குவித்த லயோனல் மெஸ்ஸிக்கு உலக சாம்பியன் பட்டம் மட்டுமே எட்டாக்கனியாக இருந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/09eOks5