866 பந்துகளில் ஒரு டெஸ்ட் போட்டியே முடிந்தது... - தென் ஆப்பிரிக்காவை 2 நாட்களுக்குள் நொறுக்கிய ஆஸ்திரேலியா!

பிரிஸ்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவை 2 நாட்களுக்குள் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டியில் மொத்தமே 144.2 ஓவர்கள்தான் வீசப்பட்டது, அதற்குள் டெஸ்ட் போட்டியே முடிந்து விட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகக்குறைந்த பந்துகள் கொண்ட 2-வது டெஸ்ட் போட்டியாகும் இது.

இதற்கு முன்னர் 1931/32-தொடரில் அப்போதும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மொத்தமே 656 பந்துகளில் ஒரு டெஸ்ட் போட்டியே முடிந்து போனது. ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா 153 ரன்களை மட்டுமே எடுத்தது, ஆனால் தென் ஆப்பிரிக்கா அப்போது முதல் இன்னிங்சில் 36 ஆல் அவுட், 2வது இன்னிங்சில் 45 ஆல் அவுட். அதற்குப் பிறகு இப்போது வரலாறு திரும்பியது. ஆனால் இந்த முறை 866 பந்துகள் வீசப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/q6au0CM