ரஞ்சி டிராபி | தமிழகத்துக்கு எதிராக முதல் நாள் ஆட்டத்தில் ஆந்திர அணி 277 ரன்கள் குவிப்பு

கோவை: கோவையில் நடந்து வரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டித் தொடரில், தமிழகத்துக்கு எதிராக முதல் நாள் ஆட்டத்தில் ஆந்திர அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்து நிதானமாக ஆடி வருகிறது.

ரஞ்சி டிராபி கிரிக்கெட் 2022-23-ம் ஆண்டுக்கான போட்டிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. அதன்படி, தமிழகம் மற்றும் ஆந்திரா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் இன்று (டிச.20) தொடங்கியது. தமிழகம் அணிக்கு பாபா இந்திரஜித் தலைமை வகித்தார். சாய் சுதர்ஷன், ஜெகதீசன், பாபா அபராஜித், விஜய் சங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், அஜித் ராம், விக்னேஷ், வாரியர் ஆகியோர் களமிறங்கினர். ஹனுமன் விஹாரி தலைமையிலான ஆந்திரா அணியில் ரிக்க புவி, அபிஷேக் ரெட்டி, ரஷீது, கரண் ஷீண்டி, கிரிநாத், நிதிஷ்குமார் ரெட்டி, சோயப்முகமது கான், சாய்காந்த், அய்யப்பா பண்டாரு, லலித்மோகன் ஆகியோர் களமிறங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/t8oO9Hr