சுப்மன் கில் முதல் சதம், புஜாரா விரைவு சதம்: இந்தியா 258/2 டிக்ளேர் - வங்க தேசத்துக்கு 513 ரன்கள் இலக்கு

சட்டோகிராமில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இந்திய அணி தன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சுப்மன் கில் (110) தன் டெஸ்ட் முதல் சதத்தை விளாச, செடேஷ்வர் புஜாரா (102 நாட் அவுட்) தனது 19-வது டெஸ்ட் சதத்தை 130 பந்துகளில் விளாசி தன் டெஸ்ட் வாழ்க்கையில் குறைந்த பந்தில் சதம் எடுத்த சாதனையை நிகழ்த்தினார்.

இந்திய அணி மொத்தம் 513 ரன்களை வங்கதேசத்திற்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. சுப்மன் கில், ராகுல் தொடக்க ஜோடி 70 ரன்களைச் சேர்க்க அதன் பிறகு புஜாரா - சுப்மன் கில் ஜோடி 113 ரன்களை 2வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். செடேஷ்வர் புஜாரா பொதுவாக நிதானித்து ஆடுபவர்தான் முதல் இன்னிங்சில் ‘ட்ரிக்கான’ பிட்சில் 203 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்து தைஜுலின் அருமையான பந்தில் பவுல்டு ஆகி தன் நீண்ட நாளைய சத வளர்ச்சியைப் போக்க முடியாமல் ஆட்டமிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/i9JN4W1