பெரம்பூர்: தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அரசு மதரஸா-ஐ-ஆசாம் மேல்நிலை பள்ளி.
பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்த விளையாட்டுத் தொடர் நடத்தப்பட்டது. குறு வட்ட அளவில் (Zonal) வெற்றி பெற்ற 18 அணிகள் இந்தத் தொடரில் கலந்து கொண்டன. கடந்த ஒரு வார காலமாக போட்டிகள் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அரசு மதரஸா-ஐ-ஆசாம் மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித கப்ரியேல் மேல்நிலைப் பள்ளியும் விளையாடின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/2S6yNWd