
அடிலெய்ட்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி, பேட்டிங் பயிற்சி மேற்கொண்டபோது காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் சிறிய இடைவேளைக்கு பிறகு அவர் மீண்டும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷல் படேல் வீசிய பந்து கோலியை பதம் பார்த்துள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை விளையாட உள்ளன. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில் இந்திய அணி வீரர்களுக்கு காயம் குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/vo8tZJw