
அடிலெய்டில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியின் 41-வது ஆட்டத்தில் வங்கதேசத்தின் அரையிறுதிக் கனவைத் தகர்த்தது, பாகிஸ்தான் அரையிறுதியில் நுழைந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் 6 புள்ளிகளுடன் 1.028 என்ற நெட் ரன் ரேட்டில் முதலிடத்தில் உள்ளது.
வங்கதேசம் டாஸ் வென்று முதலில் பேட் செய்து 11வது ஓவரில் 73/1 என்ற வலுவான நிலையிலிருந்து ஷாஹின் அஃப்ரீடி, ஷதாப் கான் பந்து வீச்சில் சீட்டுக்கட்டு போல் சரிந்து, 20 ஓவர்களில் 127/8 என்று முடிந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான், 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. முன்னதாக தென் ஆப்பிரிக்கா சந்தேகத்துக்குரிய விதத்தில், நெதர்லாந்திடம் தோல்வி அடைந்ததால், இந்தியா அரையிறுதியில் நுழைந்ததோடு பாகிஸ்தான், வங்கதேச போட்டியை நாக் அவுட் காலிறுதிப்போட்டி போல் ஆக்கிவிட்டது. இதனையடுத்து இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி செல்லும் என்ற நிலையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/tgwdIYG