T20 WC அரையிறுதி அலசல் | மீண்டெழுந்த இங்கிலாந்தின் ஆக்ரோஷமும், அம்பலம் ஆன இந்திய அணியின் போதாமைகளும்!

சிட்னியில் புதன்கிழமை நியூஸிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்திய உடனேயே மெல்போர்ன் இறுதியில் இந்தியா, பாகிஸ்தான்தான் என்று உத்தரவாதமாக நினைத்து பூரிப்படைந்த இந்திய ரசிகர்களுக்கு வியாழக்கிழமை இங்கிலாந்து அதிர்ச்சி அளித்ததோடு, ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் 16 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தானைச் சந்திக்கிறது. இந்திய அணியின் பவுலிங் பலவீனத்தை இங்கிலாந்து இதன்மூலம் அம்பலப்படுத்திவிட்டது.
அயர்லாந்திடம் தோற்ற, இலங்கை நிர்ணயித்த குறைந்த இலக்கை எட்ட திக்கித் திணறி கடைசியில் போராடி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இன்று இத்தனை ஆக்ரோஷமாக வெற்றி பெற்று இந்திய அணியை ஊதித் தள்ளியது என்றால் இந்திய டி20 அணியில் பிரச்சினைகள் இருக்கிறது என்றுதான் அர்த்தம். இந்திய பந்துவீச்சின் பலவீனத்தை வங்கதேசம் அன்று அம்பலப்படுத்தியது. அன்றைய போட்டியில் லிட்டன் தாஸ் காட்டிய அதிரடியை வேறு ஒரு தளத்தில் இன்று பட்லரும், அலெக்ஸ் ஹேல்சும் காட்டிவிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/xXnlhwg