T20 WC | தனது சாதனையை முறியடித்த கோலியை மனதார பாராட்டிய ஜெயவர்தனே

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் தனது அபார ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார் இந்திய வீரர் விராட் கோலி. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 220 ரன்கள் குவித்துள்ளார். அதோடு டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக இந்த சாதனை இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தனது சாதனையை முறியடித்த விராட் கோலியை மனதார பாராட்டி உள்ளார் மஹிலா ஜெயவர்தனே. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பகிர்ந்துள்ளது. தனது வாழ்த்து செய்தியில் அவர் சொல்லியுள்ளது என்ன?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/nOD3gPl