T20 WC | நெதர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி... இதயம் நொறுங்கிய தென் ஆப்பிரிக்கா - அரையிறுதியில் இந்தியா!

அடிலெய்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி, நெதர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்டு வெளியேறியது, இதனையடுத்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேற, பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெல்கிறதோ அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று நாக் அவுட் போட்டியாகியுள்ளது.
தென் ஆப்பிர்க்கா அணி டாஸ் வென்று முற்றிலும் பேட்டிங் சாதகப் பிட்சில் நெதர்லாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தது புரியாத புதிர் என்பதோடு அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா ஆடியவிதம் பலவித சந்தேகங்களை எழுப்புவதாக இருந்தது. முதலில் பேட் செய்யப் பணிக்கப்பட்ட நெதர்லாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி விட்டேற்றியாக பேட்டிங் ஆடி 145/8 என்று அதிர்ச்சித் தோல்வி அடைந்து 5 புள்ளிகளுடன் வெளியேற்றம் கண்டது. இதன் மூலம் டாப் 4 இடங்களில் முடிந்த நெதர்லாந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு இயல்பாகவே தகுதி பெற்று விட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/UAEoz5t