
சிட்னி: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை தென் ஆப்பிரிக்க அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது பாகிஸ்தான். இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உயிர்ப்போடு வைக்க முடியும் என்ற நிலையில் பாகிஸ்தான் விளையாடியது. அதனை தங்கள் வசம் வசியமும் செய்துள்ளது பாகிஸ்தான். மழை குறுக்கிட்ட காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறையின் கீழ் இந்த வெற்றியை அந்த அணி பெற்றுள்ளது.
சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் ஐந்தாவது விக்கெட்டிற்கு நவாஸ் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் இணைந்துணர். இருவரும் 52 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நவாஸ் 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ph0g4wT