
பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. அந்த அணியின் கேப்டன் பட்லர், ஹேல்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன் ஆகியோர் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹேல்ஸ் மற்றும் கேப்டன் பட்லரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 81 ரன்கள் சேர்த்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ், 40 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். பட்லர் 47 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/cEZkrCI