T20 WC | வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா 184 ரன்கள் குவிப்பு

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி 184 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடி இருந்தனர்.

அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. அதனால் இந்திய அணி முதலில் பேட் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித், 8 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். அவர் பவுண்டரி லைனில் கொடுத்த கேட்ச் வாய்ப்பு ஒன்றை வங்கதேச அணி மிஸ் செய்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/eBEdK3i