நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் உருகுவே அணிக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணியின் முதல் கோலை பதிவு செய்தது யார் என்ற விவாதம் எழுந்தது. இந்தச் சூழலில் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு அடிடாஸ் நிறுவனம் அதை உறுதி செய்துள்ளது.
ஒருபக்கம் ரொனால்டோ கோல் போட்டதாக கொண்டாடித் தீர்த்தார். மறுபக்கம் அது ப்ரூனோ பதிவு செய்த கோல் என நடுவர்கள் தீர்ப்பு வழங்கினர். ‘ஹேர் ஆஃப் காட்’ எனவும் ரசிகர்கள் சிலர் இந்த கோலை சொல்லி வருகின்றனர். இப்படி இருக்க, அடிடாஸ் களத்தில் குதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/L18Yctu