FIFA WC 2022 | இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரத்தம் சிந்திய நிலையில் வெளியேறிய ஈரான் கோல் கீப்பர்
தோஹா: நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் குரூப் ‘பி’ சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் 12-வது நிமிடத்தில் ஈரான் அணியின் கோல் கீப்பர் அலிரேசா பெய்ரன்வன்ட் காயம் அடைந்தார். ரத்தம் சிந்திய நிலையில் களத்தில் இருந்து வெளியேறினார் அவர்.
கடந்த 2018 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது இங்கிலாந்து அணி. இந்த முறை அதையும் கடந்து செல்ல வேண்டுமென்ற நோக்கில் அந்த அணி களம் இறங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/k4VKQPJ