
புதுச்சேரி: கத்தார் நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க 32 அணிகளின் வீரர்கள் மற்றும் அந்தந்த அணிகளின் ரசிகர்கள் என அனைவரும் உலக அளவில் ஆயத்தமாகி வருகின்றனர். எப்படியும் அடுத்த சில நாட்களுக்கு பூமிப்பந்தை விட மைதானத்தில் கால்பந்துகள் அதிக அளவில் சுழல உள்ளன.
இந்த வேளையில் கால்பந்தாட்ட உலகமே ஒருவரை மிஸ் செய்கிறது. அது அந்த விளையாட்டின் மாவீரரான மரடோனா. அவர் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நின்றபடி பல கோடி கண்களின் கவனத்தை ஈர்க்கும் காந்த சக்தியை பெற்றவர். கடந்த நான்கு ஆண்டுகளில் உலகில் பல மாற்றங்கள் நடந்துவிட்டது. கரோனா தொற்று தொடங்கி மரடோனா பிரிவு வரையில் அது நீள்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/CQrhGWo