கத்தார்: 5 உலகக் கோப்பை தொடரில் கோல் பதிவு செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் 65-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து இந்த உலகக் கோப்பையில் அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இன்று கோல் அடித்ததன்மூலம் லயோனல் மெஸ்ஸி இதுவரை வைத்திருந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தார் ரொனால்டோ.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/KiGByDI