FIFA WC 2022 | கத்தார் மைதானங்களில் பீர் விற்பனைக்கு தடை; 32 நாடுகளின் பீர்களை சேகரித்த முரட்டு ரசிகர்!

தோஹா: கத்தார் நாட்டில் வரும் ஞாயிறு அன்று ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்தத் தொடர் அந்த நாட்டில் 5 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் நடைபெற உள்ளது. தொடரில் பங்கேற்று விளையாட உள்ள நாடுகளின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பெருந்திரளான மக்கள் கூட்டம் ஆகாய மார்க்கமாக சென்று அங்கு லேண்ட் ஆகியுள்ளது. இந்தச் சூழலில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ள மைதானங்களில் பீர் மதுபானம் விற்பனைக்கு தடை விதித்துள்ளது கத்தார் அரசு.

கடந்த செப்டம்பர் வாக்கில் உலகக் கோப்பை ஏற்பாட்டுக் குழு மைதானம் மற்றும் ஃபேன் ஸோனில் மதுபான வகையான பீரை பரிமாற முடிவு செய்தது. அதற்கு தகுந்தது போல ஃபிஃபாவின் ஸ்பான்ஸரான பட்வைஸர் தயாரிப்பு பீர்களை மைதானத்தில் வழங்க ஃபிஃபா மற்றும் கத்தார் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த முடிவில் யூ-டர்ன் அடித்துள்ளது கத்தார். அந்த நாட்டில் மதுபான விற்பனைக்கு பல்வேறு கெடுபிடிகள் அமலில் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/d02epa6