“நாட்டுக்காக கேட்கிறோம்..." - ஒருநாள் கிரிக்கெட் ஓய்வை ஸ்டோக்ஸ் மறுபரிசீலனை செய்ய கோரும் குரல்கள்

அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. அதன் மூலம் ஒரே நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பையை கைவசம் வைத்துள்ளது அந்த அணி. அதற்கு முழு காரணமாக இருக்கும் வீரர்களில் ஒருவர் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

31 வயதான அவர் கடந்த ஜூலை வாக்கில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தச் சூழலில் இது மாதிரியான ஒரு மேட்ச் வின்னர் தங்கள் அணிக்கு தேவை என்பதால் அவரை நோக்கி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், பயிற்சியாளர், முன்னாள் வீரர் போன்றவர்கள் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/pFVNXLR