கோலி இடத்தில் இறங்கி மிரட்டல்... இந்திய டெஸ்ட் அணிக்கும் சூர்யகுமார் தேவை. ஏன்?

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் நாம் இழந்தது என்ன என்பது ஞாயிற்றுக்கிழமை சூர்யகுமார் யாதவ், கோலி இறங்கும் 3-ம் நிலையில் இறங்கி ஆடியபோதுதான் புரிந்தது. இதுதான் ஆட்டம், இதைத்தான் உலகக் கோப்பை டி20-யில் நாம் இழந்தோம் என்பது புரிந்தது. மேலும் சூர்யகுமார் யாதவ் ரக பேட்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் தேவைப்படும் ஒன்று.

இது குறித்து சூர்யகுமார் யாதவ், ‘ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ’ சுருக்கப் பேட்டியில் கூறும்போது, “வருவேன், நேரம் வந்து விட்டது. முதல் தரக் கிரிக்கெட்டில், சிவப்புப் பந்தில் கணிசமாகப் பங்களிப்பு செய்த அனுபவம் உள்ளது. எனவே வருவேன்... வந்து விடுவேன்” என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/oPLfJn6