அர்ஜுனா விருது பெறும் ஜெர்லின் அனிகா... மதுரை மாநகராட்சிப் பள்ளியில் படித்து சர்வதேசப் போட்டிகளில் சாதித்தவர்!

மதுரை: மதுரை மாநகராட்சிப் பள்ளியில் படித்த காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பேட்மின்டன் வீராங்கனையான ஜெர்லின் அனிகா, தேசிய அளவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ளார். காதுகேளாதோர் பிரிவில் அர்ஜுனா விருது பெறும் முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியை சோ்ந்தவர் ஜெயரட்சகன், லீமாரோஸ்லின் தம்பதியரின் மகள் ஜொ்லின் அனிகா (வயது 18). தற்பாது மதுரை லேடி டோக் கல்லூரி முதலாம் ஆண்டு பொருளாதாரம் படிக்கிறார். பள்ளிப் படிப்பை மதுரை மாநகராட்சி அவ்வை மேல் பள்ளியில் பயின்றார். சிறு வயது முதலே பேட்மின்டன் விளையாட்டில் பயிற்சி பெற்று வந்துள்ளார். மாநகராட்சிப் பள்ளியில் படித்துக்கொண்டே மாநில, தேசிய மற்றும் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று சாதித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/SBqJjtd