
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் விளையாட உள்ள தொடர்களில் இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரவி பிஷ்னோய் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அணியின் விவரம் வெளியானதும் தாங்கள் தேர்வு செய்யப்படாததை அறிந்து விரக்தி அடைந்துள்ளன. அதற்கு அவர்கள் ரியாக்ட்டும் செய்துள்ளனர். ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து மற்றும் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணியை நேற்று அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். ஒவ்வொரு தொடரிலும் வெவ்வேறு கேப்டன்கள் மற்றும் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/a4wBuFt