
மெல்போர்ன்: டென்னிஸ் உலகின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோகோவிச் எதிர்வரும் 2023 ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தடையை ஆஸ்திரேலிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதன் மூலம் இது சாத்தியமாகி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க ஜோகோவிச் ஆஸ்திரேலியா சென்ற நிலையில், விசா சிக்கல் காரணமாக அதில் பங்கேற்க முடியாமல் அப்போது வெளியேறி இருந்தார். அவருக்கு விசா மறுக்கப்பட்டதற்கான பிரதான காரணம், அவர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததுதான். அது தொடர்பாக அவர் சட்டப் போராட்டம் நடத்தினார். இருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது அந்த நாட்டின் தடுப்பூசி கொள்கை அப்படி இருந்தது. அது உலக அளவில் கவனம் பெற்றிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/9fvLuOR