சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000+ ரன்கள் குவித்து கோலி புதிய சாதனை

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் அரை சதம் விளாசி இருந்தார் இந்திய வீரர் விராட் கோலி. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேனாகவும் கோலி அறியப்படுகிறார். முக்கியமாக நடப்பு டி20 உலகக் கோப்பை அதிக ரன்களை குவித்துள்ள பேட்ஸ்மேனாகவும் கோலி உள்ளார். 6 இன்னிங்ஸ் விளையாடி 296 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 அரை சதங்கள் அடங்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/a7TDq6t