நேப்பியர்: இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் மழை காரணமாக ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. டக்வொர்த் லூயிஸ் முறையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்த காரணத்தால் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடியாமல் போயுள்ளது. இதனால் இந்திய அணி 1-0 என டி20 தொடரை வென்றுள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/swPB6mC