T20 WC | இலங்கைக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்த சென்னை வீரர்: யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் சுற்றுப்போட்டியின் பிரிவு ஏ ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்தார் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் கார்த்திக் மெய்யப்பன். இவர் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இலங்கை அணி 117/2 என்று நன்றாக ஆடிக்கொண்டிருந்தனர். தொடக்க வீரர் பதுன் நிசாங்கா நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். அவருடன் அதிரடி வீரர் ராஜபக்ச இருந்தார். அப்போதுதான் கார்த்திக் மெய்யப்பன் என்ற அந்த 22 வயது யுஏஇ லெக் ஸ்பின்னர் புகுந்தார். இவர் 13-வது டி20 போட்டியையே ஆடுகிறார். 3 பந்துகளில் வரிசையாக ராஜபக்ச, சரித் அசலங்கா, இலங்கை கேப்டன் தசுன் ஷனகா ஆகியோரை காலி செய்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/HjMNqAb