
பிரிஸ்பேன்: பாகிஸ்தான் அணியின் இடக்கை பந்து வீச்சாளரான ஷஹீன் அஃப்ரிடி வீசிய அசுர வேக யார்க்கர் டெலிவரி ஒன்று ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸின் பாதத்தை பதம் பார்த்தது. அதனால் அவர் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து களத்தில் வலியால் துடித்த அவரை அந்த அணியின் சப்ஸ்டிடியூட் வீரர் ஒருவர் முதுகில் சுமந்து சென்றார்.
இந்த சம்பவம் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடருக்கான வார்ம்-அப் போட்டியில் நடந்தது. காயமடைந்த குர்பாஸுக்கு எலும்பு முறிவு ஏதும் இல்லை என்றும் ஸ்கேன் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளப்பட்டது. இதனை ஆப்கானிஸ்தான் அணியின் வாரியமும் உறுதி செய்துள்ளது. வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள சூப்பர் 12 சுற்று போட்டியில் அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மழை காரணமாக முடிவு எட்டப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/qcZsg9G